02. திணிவைப்
பிரித்துக் காட்டுவது எது - திணை
03. மலையும்
மலை சார்ந்த நிலமும் எது
- குறிஞ்சி
04. காடும்
காடு சார்ந்த நிலமும் - முல்லை
05. வயலும்
வயல் சார்ந்த நிலமும் - மருதம்
06. கடலும்
கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
07. முல்லையும்
குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற நிலம் - பாலை
08. புணர்தலும்
புணர்தல் நிமித்தமும் (கூடல்) - குறிஞ்சி
09. இருத்தலும்
இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்) - முல்லை
10. ஊடலும்
ஊடல் நிமித்தமும் - மருதம்
11. இரங்கலும்
இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) - நெய்தல்
12. பிரிதலும்
பிரிதல் நிமித்தமும் - பாலை
13. பாடல்
தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது - பாடாண் திணை
14. உலகத்தின்
நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை - காஞ்சித் திணை
15. மன்னனுடைய
வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது
- வாகைத் திணை
16. படையெடுத்து
வந்த வேற்று நாட்டு அரசனுடன்
போர் செய்து அவனை வெல்வது
பற்றிக் கூறுவது- தும்பைத் திணை
17. ஒரு
அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை
முற்றுகை இடுவதையும், பகை அரசன் நடவடிக்கைகளையும்
பற்றிக் கூறுவது - உழிஞைத் திணை
18. மன்னனொருவன்
வேற்று நாட்டின் மீது படை நடத்திச்
செல்வது, அதனைப் பகை அரசன்
எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது
- வஞ்சித் திணை
19. ஒரு
மன்னன் எதிரி நாட்டு எல்லையூடு
புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும். அந்த ஆநிரைகளை மீட்டு
வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை - வெட்சித் திணை
20. புறத்திணைப்
பிரிவுகள் எத்தனை வகைப்படும்- 7
No comments:
Post a Comment