Friday, January 23, 2015

பொது தமிழ் - சீவக சிந்தாமணி


01. சீவக சிந்தாமணியை எழுதிய சமண முனிவர் யார் - திருத்தக்கதேவர்
02. சீவக சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக கொண்டது - சீவகன் 
03. சீவக சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா 
04. சீவகனின் தந்தை மற்றும் தாய் பெயர் - சச்சந்தன், விசயமாதேவி 
05. சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
06. சீவகனின் பகைவன் - கட்டியங்காரன்
07. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது - 13
08. ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் - இலியமட் மற்றும் ஒடிசி
09. சீவக சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்
10. முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
11. சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
12. திருத்தக்கதேவரின் காலம் - கி.பி 9ஆம் நூற்றாண்டு
13. சீவக சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145
14. திருத்தக்கதேவரின் வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்
15. திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்
16. சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் எத்தனை நாட்களில் எழுதி முடித்தார் - 8 நாட்கள்
17. திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய இடம் - மதுரை தமிழ் சங்கம் 
18. சீவக சிந்தாமணியின் முதல் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
19. சீவக சிந்தாமணியின் இறுதி இலம்பகம் - முக்தி இலம்பகம்
20. சிந்தாமணி என்பது என்ன - கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி

No comments:

Post a Comment