1. கவிஞர் சுரதாவின் காலம்
- 23 நவம்பர் 1921 - 19 ஜீன் 2006
2. கவிஞர் சுரதாவின் இயற்பெயர்
- இராசகோபாலன்
3. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் - சுரதா
4. கவிஞர் சுரதாவின் சொந்த ஊர் - பழையனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
5. கவிஞர் சுரதாவின் பெற்றோர்
- திருவேங்கடம் - சண்பகம் அம்மையார்
6. கவிஞர் சுரதா யாரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்
7. சுரதாவின் முதல் நூல்
- சாவின் முத்தம்
8. தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972
9. பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர்
பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் - சுரதா
10. சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
அளித்த விருது - இராசராசன் விருது
11. சுரதாவின் படைப்புகளுக்கு எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்
12. சுரதா பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் கண்டு பழகிய நாள்
- 1941 ஜனவரி 14
13. சுரதா யார் மீது கொண்ட பற்றுதலால் தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார் - பாரதிதாசன்
14. சுரதாவை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி
15. கவிஞர் சுரதா 1955இல் தொடங்கிய வார இதழ் - காவியம்
No comments:
Post a Comment