Tuesday, February 10, 2015

பொதுத்தமிழ்


   1)   ‘ஆற்றுணா’ என்பது -  வழிநடை உணவு
2)   ‘செலவாங்குவித்தல்’ என்றால் என்ன - பொருள்வயின் பிரிவைத் தடுப்பது
3)   குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார் - கபிலர் 
4)   இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார் - உமறுப்புலவர்
5)   நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது - மூன்றாம் நந்திவர்மன்
6)   கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது - அழகம்மை ஆசிரிய விருத்தம் 
7)   கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்
8)   ‘ஆளுடைய பிள்ளை’ என அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்
9)   சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்
10) கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் - குகன்
11) நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார் - ஆண்டாள்
12) “குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது” என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது - கல்வி 
13) போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது - பரணி
14) கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை - முற்றுமோனை
15) அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை
16) பிரித்தெழுதுக: “தீந்தேன்” - தீம்+தேன்
17) வேர்சொல்லை அறிந்து எழுதுக: “கண்டேன்” - காண்
18) தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது - ஆதிச்சநல்லூர்
19) முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்
20) “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார் - திரு.வி.க. 

1 comment: