1) தன் கல்லறையில் ‘தமிழ்
மாணவன்’
என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
2) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
3) வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
- இத்தாலி
4) சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்
5) தமிழ் நாடகத் தந்தை
என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
6) நூறில் ஒரு பங்குடைய
அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்
7) தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்
8) கடல் பயணத்தை முந்நீர்
வழக்க மெனக் குறிப்பிடும் நூல்
எது - தொல்காப்பியம்
9) ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும்
மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்
10) சுகுண விலாச சபா
என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர்
யார் - பம்மல் சம்பந்த முதலியார்
11) ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார்
நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது
- வடலூர்
12) சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி
முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி
13) பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து
நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்
14) பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை
ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்
15) தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்
- நாமக்கல் கவிஞர்
16) ‘மோ’
என்னும் எழுத்து குறிக்கும் பொருள்
என்ன - முகர்தல்
17) சீவக சிந்தாமணியை இயற்றியவர்
யார் - திருத்தக்கதேவர்
18) பத்துப் பருவங்களைக் குறிக்கும்
நூல் எது - பிள்ளைத் தமிழ்
19) தொண்டர் சீர் பரவுவார்
என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்
20) அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள்
- பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
No comments:
Post a Comment