1) நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
2) நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
3) இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
4) நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு
5) தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
6) இலைமறை காய் போல் - மறைபொருள்
7) மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
8) விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
9) சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
10) உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
11) மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
12) இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
13) குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
14) வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
15) வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
16) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
17) சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
18) அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு
19) கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
20) அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்
No comments:
Post a Comment